கூடக்கோவில் நாடார்கள் உறவின்முறையைச் சார்ந்த சான்றோர்கள் ஊக்கத்தினாலும் இராவ்சாகிப் A.A. ஆறுமுக நாடார் அவர்களின் நன் முயற்சியாலும் எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் கல்வி பெற்றிடும் உயர் நோக்கோடு 26-4-1929 இல் கூடக்கோவில் நாடார்கள் வித்தியாசாலை துவங்கப்பட்டது.ன் அதற்கு இராவ்சாகிப் A.A. ஆறுமுக நாடார் அவர்கள் தாளாளராகத் திகழ்ந்தார்கள். பின்னர் நாட்டாண்மை உயர்திரு. குருசாமி நாடார் அவர்கள் தாளாளராகப் பணியாற்றினார்கள்.